Monday, July 26, 2010

இமெயில் - ரிப்ளை & கால் அட்டெண்ட் பண்ணவோமே!!!

அந்த காலத்துல ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட ஏதாவது சொல்லன்னும்னாலோ இல்ல எதுவும் கேட்கனும்னாலோ இல்ல நலம் விசாரிக்கனும்னாலோ கடிதம் எழுதினாங்க. அதுக்கு பதில் கடிதம் எழுதுவாங்க. ஒரு தகவல் பரிமாற்றத்துக்கு பல நாட்கள் பிடிச்சுது. அப்புறம் அது டெலிபோன் அச்சு. அது மூலமா சில மணி நேரத்துல தொடர்பு கொண்டு பேச முடிஞ்சுது.

இப்போ இமெயில் & செல்போன். ரெண்டுமே உறவுகள தொடர்புல வச்சிருக்குறதுக்கு ரொம்பவே பயன்படுது. குறிப்பா இமெயில். எந்த நாட்டுல இருந்தும் யாருக்கும் எதுவும் தெரியப்படுத்தவோ தெரிஞ்ச்சுக்கவோ (சில சமயம் முக்கியமான தகவல் பரிமாற்றத்துக்கும்) செலவே இல்லாம இமெயில் மூலமா தகவல் சொல்ல முடியும். இன்னும் ஒரு படி மேலே போயி இமெயில் என்பது ஒரு அதிகார பூர்வ ஊடகமாகவே ஆகிவிட்டது. கணினித் துறைன்னு மட்டுமில்ல, பல துறைகள்லயும் வேலைக்கு ஆள் எடுக்குறதுல இருந்து தொழிலாளர்களுக்கு வேலையை பகிர்ந்தளிக்கிறது அது இதுன்னு எத எடுத்தாலும் இமெயில்தான் எல்லாமே. ஒரு தொழிலாளி அந்த கம்பெனிய விட்டே வேற கம்பெனிக்கு போயிட்டாலும், ஏதும் தேவை வந்தால் இமெயில் மூலம்தான் பழைய கம்பெனிய தொடர்பு கொண்டாக வேண்டும். ஆக, இமெயில் என்பது நம் வாழ்க்கையில முக்கிய அங்கம்.

சரி, எதுக்கு இந்த வரலாறு இப்போன்னு யோசிக்கிறிங்க. நானே சொல்லிடறேன். எனக்கு சில (நெருங்கிய) நண்பர்கள் இருக்காங்க. அதுவும் அவங்க வேலை செய்றது எல்லாம் நம்ம துறையில்தான். ஆனா பாருங்க - நாம எதாவது இமெயில் அனுப்பினா, கெணத்துல போட்ட கல்லு மாதிரி ஒரு பதிலும் இருக்காது. மெயில படிச்சானா, இல்லியான்னே தெரியாது. நாமளும் கொஞ்ச நாள் பாத்துட்டு அடுத்த மெயில் அனுப்புவோம். இப்பவும் எந்த ரியாக்ஷனும் இருக்காது. சரின்னு நாமளும் விட்டுருவோம்; அவன்கிட்ட இருந்து எதுவும் நடக்க வேண்டியது இருந்தாலோ இல்ல அவன எதிர்பாத்து எதுக்காவது கத்துகிட்டு இருந்தாலோ, வேற எதாவது ஏற்பாடு செஞ்சுக்குவோம் (வேற வழி?). என்னிக்காவது அவன்கிட்ட போன்ல பேசும்போது அந்த இமெயில பத்தி கேட்டோம்னா "மெயில பாத்தேன், ரிப்ளை பண்ண மறந்துட்டேன்"ன்னு சொல்லுவான். இல்லன்னா "மெயில அப்பவே படிச்சேன்டா, ரிப்ளை பண்ணல, கொஞ்சம் பிஸிடா ... இப்போ அதுக்கென்ன?"ம்பான்.

இந்த மாதிரி நான் என்னோட ஒரு நண்பனை மட்டும் சொல்லல. என்னோட நெறைய நண்பர்கள் இப்பிடித்தான் இருக்காங்க. இவனுக்கு ரிப்ளை பண்ணக்கூடாதுன்னு மெயில படிச்சுட்டு டெலிட் பண்றவங்க யாரும் இல்லை, ஏன்னா எனக்கு எல்லாரையுமே நல்லா தெரியும் (நெருங்கிய நண்பர்கள்தான்).

கொஞ்சம் யோசிச்சு பாத்தா நாம பலப்பல விஷயங்களுக்கு மெயில் அனுப்புறோம். உதவியோ ஆலோசனையோ கேட்டு இருக்கலாம். சந்தோஷமான அல்லது சோகத்த பகிர்ந்துக்கற விஷயமா இருக்கலாம். அழைப்பிதழா இருக்கலாம். இன்பர்மேஷனா இருக்கலாம். பக்கத்து வீட்டுலயே இருந்தாகூட சில சமயம் சில விஷயங்கள சொல்றத விட எழுதுறது ஈஸியா இருக்கும். ஒரு எமர்ஜென்சி விஷயமா இருக்கலாம் (குரூப் மெயில்). நலம் விசாரிக்கிறதாக் கூட இருக்கலாம். எதுவா இருந்தா என்ன? படிச்சுமுடிச்சுட்டு ஒரு வரி (ஒரு வார்த்தையாவது) ரிப்ளை பண்றதுக்கு என்ன? அனுப்பினவனுக்கு ஒரு மரியாதையாவாவது இருக்குமில்ல? யாரும் நம்ம வீட்டுக்கு வந்தா கண்டுக்காம இருப்போமா?அதே மாதிரிதான், இமெயில் மூலமா தெரிஞ்சவரோ தெரியாதவரோ நம்மள தேடி வர்றாங்க, அவங்கள உபசரிக்க வேண்டாம், வாங்கன்னாவது கேட்கலாமில்ல? அட அதகூட விடுங்க - யாராவது நம்மகிட்ட பேசும்போது எந்த ரியாக்ஷனும் இல்லாம கம்முன்னா இருப்போம்? "ம்ம்ம்"ன்னோ இல்ல "சரி"-ன்னோ சொல்றதில்ல? அந்த மாதிரிதான். அட நிங்க பிஸின்னா கூட, "நான் இப்போ பிஸி"-ன்னாவது ஒரு ரிப்ளை பண்ணலாமில்ல? அதுக்கு மிஞ்சிப் போனா ஒரு பத்து வினாடி ஆகுமா? அதுக்கு கூடவா நமக்கு டைம் இல்ல?

அதே மாதிரி வர்ற எல்லா விதமான இமெயிலுக்கும் ரிப்ளை பண்ணிட்டு இருக்கக்குடாது. எதுக்கு/யாருக்கு ரிப்ளை பண்ணனும்/பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சிருக்கணும். சில பேர் அவங்க இமெயில் அக்கவுன்ட்ட பாக்குறதே இல்ல. இவங்க இதுக்கும் மேல. வீட்ட பூட்டிட்டு எங்கயோ போயிட்டா மாதிரி (இமெயில் அக்கவுண்ட்டே இல்லாதவங்கள உடுங்க). அவங்களை எல்லாம் என்ன பண்றது?

செலவில்லாம ஒரு விஷயத்த பகிர்ந்துக்க இமெயில் எவ்ளோ நல்ல விஷயம்? இண்டர்நெட்ல தேவை இல்லாம எவ்ளோ நேரம் செலவு பண்றோம்? நம்ம உறவுகள, அவங்க எண்ணங்கள பகிர்ந்துக்க இந்த இமெயில தினமும் ஒரு சில நிமிடங்கள் பயன்படுத்தினா என்ன?


அதே மாதிரி சிலர செல்போன்ல கால் பண்ணினா எடுக்க மாட்டாங்க. திருப்பி நமக்கு கால் பண்ணவும் மாட்டாங்க. (சில சமயம் எடுத்தாலும் "டேய் மச்சி, நான் இப்போ கொஞ்சம் பிசிடா... ஒன அவர்-ல நானே போன் பண்றேன்"-ன்னு சொல்லுவாங்க; ஒரு மணி நேரம் என்ன ஒரு நாளே வெயிட் பண்ணினாலும் நம்மள கால் பண்ண மாட்டாங்க). எதோ தெரியாத நம்பர்ல இருந்து வந்த கால்-னா கூட பரவாயில்ல. யார் பண்ணி இருக்காங்கன்னு தெரியும், "எதுக்கோ கால் பண்ணி இருக்கானே, நாம அட்டெண்ட் பண்ணலையே, கூப்பிட்டு என்னன்னு கேக்கலாம்"-ன்னு கொஞ்சம் கூட கவலைப்படுறது கிடையாது. திரும்பவும் நாமலே கால் பண்ணினாலும் திரும்பவும் பிஸி. அட கருமமே... இது எதோ ஒரு நாள்-(இல்ல எப்பவாவது)ன்னா பரவாயில்ல. எப்பவுமே இப்பிடித்தான்னா என்ன பண்றது?

நமக்கு தெரிந்தவர்களையும் நெருங்கினவர்களையும் விட்டு விலகி, அதுவும் அவங்களுக்கு ஒரு தேவைங்கற நேரத்துல அவங்களோட தொடர்பு எல்லைக்கு வெளில நின்னுகிட்டு என்ன பிஸியா இருந்து என்ன பிரயோசனம்? அப்பிடி சம்பாதிச்சுதான் என்ன புண்ணியம்?

............. யோசிக்கலாமே!!!

-சமுத்திரன்.

No comments:

Post a Comment