Sunday, July 25, 2010

சிங்கப்பூர் - என்ன கொடுமை சார் இது?

உணவு... உடை... உறைவிடம்...

இது மூணு்ல உறைவிடம் எவ்ளோ முக்கியம்னு சிங்கப்பூர் வந்த மொத ரெண்டே வாரத்துல தெரிஞ்சு போச்சு. சாப்பாடு & உடை பிரச்சினை இல்ல. தங்குறதுக்கு எடம் பாக்குறதுக்குள்ள மனசும் ஒடம்பும் பட்ட பாட்ட சொல்ல முடியாது - அப்பப்பா. வெளக்கமாவே சொல்றேன் - அதுக்குதான இந்த பதிவு.

சிங்கப்பூருக்கு நான் வந்தப்ப, எங்க கம்பெனில மொத 5 நாள் ஓட்டல்ல தங்குறதுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தாங்க (5 நாளுக்குள்ள ஒரு வீடு பாத்து போயிடுங்க, வீடு பாக்குறது இங்க ரொம்ப சுலுவம்ன்னுட்டானுங்க). யப்பா, இங்க வந்து பாத்தாத்தான் தெரியுது, வீடு பாக்குறது எவ்ளோ கஷ்டமான வேலைன்னு. வீடு எல்லாம் இருக்குது, ஆனா இவனுங்க சொல்ற ஒரு மாச வாடகைல ஒரு கிரவுண்ட் நெலமே நம்ம ஊர்ல வாங்கிடலாம். அட, எனக்கு குடுக்குற சம்பலத்துல பாதிய வாடகையா கேக்குறாங்கங்க. இப்பிடி வாடகை எல்லாம் தாறு மாறா ஏறினது எல்லாம் கடந்த 2 மாசத்துலதான்னு சொல்றானுங்க. என்ன கருமமோ. சரி விஷயத்துக்கு வருவோம்.

கம்பெனில குடுத்த 5 நாள் (ஒட்டல்ல தங்குறதுக்கு) முடிஞ்சு போச்சு, வீடும் கெடச்ச பாடில்ல. வீடு கெடைக்கிற வரைக்கும் யார்கூடவாவது தங்கிக்கலாம்னு பாத்தாலும் அதுக்கும் எங்கியும் வாய்ப்பு இல்ல. இங்க இருக்குற நண்பர்களும் எவ்ளவோ ட்ரை பண்ணி பாத்தாங்க - எதுவும் கெடைக்கல. எங்க கம்பெனில இதுக்கும் மேல என்னா ஆனாலும் ஓட்டல்ல தங்கறதுக்கு பணம் கெடயாதுன்னுட்டாங்க (நல்லா இருங்க, எனக்கும் காலம் வரும்டீ - revenge). இங்க இருக்குற ஓட்டல் வாடகைல, நாம  நம்ம கை காசு போட்டு ஒரு வாரம் கூட தங்க முடியாது.

என்னோட நல்ல நேரம்; நம் நண்பர் ஒருவர் இந்தியால இருந்து அவரோட கம்பெனில வேலை விஷயமா ஒரு வாரம் சிங்கப்பூர் வந்தார். அவரோட பெருந்தன்மையால, அவங்க கம்பெனி மூலமா அவருக்கு புக் பண்ணி இருந்த ஓட்டல்ல நானும் அந்த 1 வாரம் தங்கிக்கிட்டேன். அவர் கிளம்பற நாளும் வந்திடுச்சு. இன்னும் ஒரு எடமும் கெடைக்கல. வேற வழி இல்லாம, நண்பர் சுரேஷ், என்னை அவரோட ரூமுக்கு (எக்ஸ்ஷ்ட்ரா லக்கேஜா) கூட்டிட்டு போயிட்டார். அங்க ஒரு 2 நாள். அப்புறமா என் கூட வேலை செய்ற நண்பர் ரூமுல ஒரு வார அக்ரிமென்ட்ல தங்கினேன். அதுவும் முடியற நாள் வந்துடுச்சு. சிங்கப்பூர் மேல அடங்காத வெறுப்பு. வேலைய உட்டுட்டு திரும்பி ஊருக்கு போயிடலாமான்னு கூட யோசிச்சேன். prestige எடம் கொடுக்கல. ஒரு வழியா கல்லூரி நண்பர் சிவசங்கர் மூலமா அவரோட நண்பர் வீட்டுல ஒரு ரூம் கிடைச்சு, நான் வீடு பாக்குற வரைக்கும் தங்கியிருக்க அனுமதிச்சிருக்காங்க. இன்னிக்கு வரைக்கும் வீடு பாத்துகிட்டேதான் இருக்கேன், அமையல.

திரும்பி பாத்தா, மொத்தமா 3 வாரம்(தான்) ஓடி இருக்கு. ஆனா இந்த 3 வாரத்துல நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமில்ல. என்கிட்ட 2 பெரிய பெட்டி, 2 bag + 1 laptop இருக்குது. ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போறப்ப, அத்தன பெட்டியையும் தூக்கிட்டு போகனும். நண்பர்கள் அப்பப்ப உதவி பண்ணாங்க. இல்லைன்னா நான் என்ன பண்ணி இருப்பேன்னு தெரியல.

அடுத்த நாள் எங்க தங்குவேன்னு தெரியாது. அடுத்த நாளும் வந்திடும், எங்க போகப்போறோம்னு தெரியாது. ஏதாவது ஒரு ரூம் போலாம்னு பிளான் பண்ணவே முடியாது; அதா இதான்னு இழுத்துட்டே இருக்கும், ஏதாவது காரணத்தால கடைசி நாள் அந்த ரூமும் இல்லைன்னு ஆயிடும். ஒவ்வொரு நாளும் நரகம்தான் (அந்த வலி அனுபவிச்ச எனக்கு மட்டும்தாங்க தெரியும்). நான் அப்பப்ப பொலம்பினப்ப, நண்பர் சுரேஷ் எனக்கு குடுத்த தைரியம்தான் எப்படியோ சமாளிக்க வச்சுது. ஆனா தங்குறதுக்கு solid-ஆ ஒரு எடம் அமைஞ்ச உடனே மனசுக்குள்ள ஒரு திருப்தியும் நிம்மதியும் வந்துச்சு பாருங்க - ரூம் குடுத்த நண்பர் தெய்வமா தெரிஞ்சார், அவர் நல்லா இருக்கட்டும்.

இத்தன கஷ்டத்தையும் சமாளிச்சுட்டு நான் இங்க அப்பிடி என்னத்த கிழிக்கப் போறேன்னு உங்களுக்கு தோணும், எனக்கும் அதேதான் தோணுது. நண்பர்கள் எல்லாருமே, "வீடு கெடைக்கிற வரைக்கும்தான் இந்த பிரச்சினை, அதுக்கு அப்புறம் நல்லா இருக்கும்"-ங்குறாங்க, அதையும்தான் பாப்போம்.

-சமுத்ரன்

1 comment:

  1. வெற்றிகரமா வீடு பார்த்துட்டீங்க! வாழ்த்துக்கள் :-)

    ரொம்ப நல்லா எழுதறீங்க முத்து.. இயல்பான நடை. நீங்க இன்டலி தமிழ்மணம் போன்றவற்றில் இணைத்தால் பலரும் படிப்பார்கள். உங்களுக்கும் எழுத ஒரு ஆர்வம் இருக்கும்.

    ReplyDelete