Saturday, July 3, 2010

மலேஷியா - சுற்றுலா கட்டுரை 1

இந்த சுற்றுலாவிற்கு நானும் எனது நண்பர்களும் தயாரானதே ஒரு பெரிய கதை. அதை விடுத்து, மலேஷியா சுற்றுலாவின் சாராம்சத்தை சொல்கிறேன்.

திருச்சிலருந்து விமானம் வழியா கோலா லம்பூர் வந்தப்ப, காலைல மணி 1. ஊரே ஒளி வெள்ளத்துல மெதந்துச்சு. சாலைல பூரா வரிசையா வெளக்கு. மின் தடையே இந்த ஊர்ல (ஏன் நாட்டுலயே) இல்லயாம்பா. வந்த மொத நாளே வாயை பொளந்துட்டு காருல ஏறி ஊருக்குள்ள வந்தோம் (வழக்கம்போல விமான நிலையத்த, ஊர உட்டு ரொம்ப தூரம் தள்ளி வச்சிருக்காங்க).

அடுத்த நாள் காலங்கத்தால 5.30 மணிக்கே எழுப்பி, ரெட்டை கட்டிடத்த (petronas towers) பாக்க டிக்கெட் வாங்கனும்னு என்னையும் சுந்தரையும் அனுப்பி வச்சுட்டாங்க. சுமாரா ஒரு 7 மணிக்கு அங்க போனா, அங்க ஒரு 200 பேர் ஏற்கனவே வந்து வரிசைல நின்னுட்டிருந்தான். நாங்களும் போயி தூங்கிட்டே நின்னுட்டிருந்தோம். 9 மணிக்கு வந்து டிக்கெட் குடுக்க ஆரம்பிச்சான். அட....... காசு எதுவும் இல்லப்பா... சும்மாவே டிக்கெட் தரான். நமக்கு தோதான நேரத்த சொன்னா, ஒரு ஆளுக்கு 5 டிக்கெட் வரைக்கும் தரான். ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுந்தான் மேல ஏறி பாக்க அனுமதி, அதனாலதான் அப்பிடி கூட்டம்னு புரிஞ்சுது. வாங்கிட்டு வந்தா, அவ்ளோ நேரம் நின்னதால கால் பயங்கர வலி + பசி. சரவண பவன் பக்கத்துலயே இருந்துச்சு, சாப்பிட்டுட்டு எல்லாருமா மதியானம் திரும்ப அங்க போனோம்.
அம்மா..டி!!! காலைல தூக்கம் + பசில சரியா பாக்கல, அந்த கட்டிடங்கள் ரண்டும் என்னா ஒயரம்?! ரண்டுக்கும் நடுவுல அடுத்தடுத்ததா 2 மாடிகளுக்கு இணைப்பு பாளம் வேற. பாக்குறதுக்கே அவ்ளோ அழகு. அந்த கட்டிடத்துல மொத்தமா 84 மாடியாம். டிக்கெட் எடுத்திருந்தா அந்த இணைப்பு தளம் வரைக்கும் (34வது மாடின்னு நினைக்கிறேன்) கூட்டிட்டு போயி காட்டுறான். இடையில அந்த கோபுரம் பத்தியும், பெட்ரொனஸ் (petronas) கம்பெனி பத்தியும் வீடியோல சொல்றான் (அடடா, விளம்பரம் ஆச்சுல்ல). மேல ஏறி பாத்தா, அந்த ஊரே பூறா அவ்ளோ அழகா தெரியுது. எங்க கேமராவுக்கு அங்கதான் மலேஷியாவுல மொத வேல குடுத்தோம். எந்த கட்டிடத்த பாத்தாலும் சாதரணமாவே 50-60 மாடிதான். 10-15 மாடி கட்டிடத்த குடிசை-ன்னு சொல்றங்களோ என்னமோ...




அடுத்தது நாங்க போனது முருகன் கோயில்.
கேள்விப்பட்ட மாதிரியே ரொம்ப ஒயரமான முருகன் சிலை. ஆனா, அந்த சிலைக்கு யாரும் பூஜை செய்றதில்ல. அந்த சிலைக்கு பின்னாடி இருக்குற குகைல இருக்குற சாமிகளையும், சிலைக்கு பக்கத்துல இருக்குற மண்டபத்துல இருக்குற சாமி சிலைக்குந்தான் பூஜை பன்றாங்க.
அவ்ளோ பெரிய முருகன் சிலைக்கு அந்த முகந்தான் கொள்ளை அழகு. ரசிச்சு முகத்த செதுக்கி இருக்காங்க. பின்னாடி இருக்குற குகை அவ்ளோ பெரிசு போங்க. நாங்க எதிர்பார்க்கவே இல்ல. சின்ன ஓட்டைங்க வழியா உள்ள விழற சூரிய ஒளி ரொம்பவே அருமை. குகையோட செவுரெல்லாம் (அட, சுவர்-ங்க) இயற்கையா அழகா இருக்கு. கண்டிப்பா நம்ம குடும்பம், நண்பர்ங்க எல்லாம் இங்க வந்து பாக்கனுங்க.

அந்த ஊர்ல இருக்குறவங்கள்ள 50%க்கும் மேல ரொம்ப நல்லா தமிழ் (தஞ்சாவூர், புதுக்கோட்டை வழக்கு தமிழ்) பேசுராங்கப்பா. கோயிலுக்கு பக்கத்துல இருக்குற அத்தன ஓட்டலும் தமிழ் ஓட்டல்தான். அங்கதான் நாங்க மத்தியானம் சாப்பாடு சாப்பிட்டோம், ருசி சொல்லிகிறா மாதிரி இல்லைன்னாலும், வயித்துக்கு மோசமில்லை (தமிழ்-லாம் நல்லா பேசறீங்க, சாப்பாட்டு ருசிய கொஞ்சம் நமக்கேத்தா மாதிரி பண்ணுங்களேம்பா).

அடுத்ததா நாங்க அன்னைக்கு ராத்திரி கெளம்புனது 'லங்காவி' (Langkawi)-ங்குற தீவுக்கு. அத பத்தி அடுத்த பகுதில பாப்போம்.

-சமுத்ரன்

1 comment: