Monday, July 26, 2010

இமெயில் - ரிப்ளை & கால் அட்டெண்ட் பண்ணவோமே!!!

அந்த காலத்துல ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட ஏதாவது சொல்லன்னும்னாலோ இல்ல எதுவும் கேட்கனும்னாலோ இல்ல நலம் விசாரிக்கனும்னாலோ கடிதம் எழுதினாங்க. அதுக்கு பதில் கடிதம் எழுதுவாங்க. ஒரு தகவல் பரிமாற்றத்துக்கு பல நாட்கள் பிடிச்சுது. அப்புறம் அது டெலிபோன் அச்சு. அது மூலமா சில மணி நேரத்துல தொடர்பு கொண்டு பேச முடிஞ்சுது.

இப்போ இமெயில் & செல்போன். ரெண்டுமே உறவுகள தொடர்புல வச்சிருக்குறதுக்கு ரொம்பவே பயன்படுது. குறிப்பா இமெயில். எந்த நாட்டுல இருந்தும் யாருக்கும் எதுவும் தெரியப்படுத்தவோ தெரிஞ்ச்சுக்கவோ (சில சமயம் முக்கியமான தகவல் பரிமாற்றத்துக்கும்) செலவே இல்லாம இமெயில் மூலமா தகவல் சொல்ல முடியும். இன்னும் ஒரு படி மேலே போயி இமெயில் என்பது ஒரு அதிகார பூர்வ ஊடகமாகவே ஆகிவிட்டது. கணினித் துறைன்னு மட்டுமில்ல, பல துறைகள்லயும் வேலைக்கு ஆள் எடுக்குறதுல இருந்து தொழிலாளர்களுக்கு வேலையை பகிர்ந்தளிக்கிறது அது இதுன்னு எத எடுத்தாலும் இமெயில்தான் எல்லாமே. ஒரு தொழிலாளி அந்த கம்பெனிய விட்டே வேற கம்பெனிக்கு போயிட்டாலும், ஏதும் தேவை வந்தால் இமெயில் மூலம்தான் பழைய கம்பெனிய தொடர்பு கொண்டாக வேண்டும். ஆக, இமெயில் என்பது நம் வாழ்க்கையில முக்கிய அங்கம்.

சரி, எதுக்கு இந்த வரலாறு இப்போன்னு யோசிக்கிறிங்க. நானே சொல்லிடறேன். எனக்கு சில (நெருங்கிய) நண்பர்கள் இருக்காங்க. அதுவும் அவங்க வேலை செய்றது எல்லாம் நம்ம துறையில்தான். ஆனா பாருங்க - நாம எதாவது இமெயில் அனுப்பினா, கெணத்துல போட்ட கல்லு மாதிரி ஒரு பதிலும் இருக்காது. மெயில படிச்சானா, இல்லியான்னே தெரியாது. நாமளும் கொஞ்ச நாள் பாத்துட்டு அடுத்த மெயில் அனுப்புவோம். இப்பவும் எந்த ரியாக்ஷனும் இருக்காது. சரின்னு நாமளும் விட்டுருவோம்; அவன்கிட்ட இருந்து எதுவும் நடக்க வேண்டியது இருந்தாலோ இல்ல அவன எதிர்பாத்து எதுக்காவது கத்துகிட்டு இருந்தாலோ, வேற எதாவது ஏற்பாடு செஞ்சுக்குவோம் (வேற வழி?). என்னிக்காவது அவன்கிட்ட போன்ல பேசும்போது அந்த இமெயில பத்தி கேட்டோம்னா "மெயில பாத்தேன், ரிப்ளை பண்ண மறந்துட்டேன்"ன்னு சொல்லுவான். இல்லன்னா "மெயில அப்பவே படிச்சேன்டா, ரிப்ளை பண்ணல, கொஞ்சம் பிஸிடா ... இப்போ அதுக்கென்ன?"ம்பான்.

இந்த மாதிரி நான் என்னோட ஒரு நண்பனை மட்டும் சொல்லல. என்னோட நெறைய நண்பர்கள் இப்பிடித்தான் இருக்காங்க. இவனுக்கு ரிப்ளை பண்ணக்கூடாதுன்னு மெயில படிச்சுட்டு டெலிட் பண்றவங்க யாரும் இல்லை, ஏன்னா எனக்கு எல்லாரையுமே நல்லா தெரியும் (நெருங்கிய நண்பர்கள்தான்).

கொஞ்சம் யோசிச்சு பாத்தா நாம பலப்பல விஷயங்களுக்கு மெயில் அனுப்புறோம். உதவியோ ஆலோசனையோ கேட்டு இருக்கலாம். சந்தோஷமான அல்லது சோகத்த பகிர்ந்துக்கற விஷயமா இருக்கலாம். அழைப்பிதழா இருக்கலாம். இன்பர்மேஷனா இருக்கலாம். பக்கத்து வீட்டுலயே இருந்தாகூட சில சமயம் சில விஷயங்கள சொல்றத விட எழுதுறது ஈஸியா இருக்கும். ஒரு எமர்ஜென்சி விஷயமா இருக்கலாம் (குரூப் மெயில்). நலம் விசாரிக்கிறதாக் கூட இருக்கலாம். எதுவா இருந்தா என்ன? படிச்சுமுடிச்சுட்டு ஒரு வரி (ஒரு வார்த்தையாவது) ரிப்ளை பண்றதுக்கு என்ன? அனுப்பினவனுக்கு ஒரு மரியாதையாவாவது இருக்குமில்ல? யாரும் நம்ம வீட்டுக்கு வந்தா கண்டுக்காம இருப்போமா?அதே மாதிரிதான், இமெயில் மூலமா தெரிஞ்சவரோ தெரியாதவரோ நம்மள தேடி வர்றாங்க, அவங்கள உபசரிக்க வேண்டாம், வாங்கன்னாவது கேட்கலாமில்ல? அட அதகூட விடுங்க - யாராவது நம்மகிட்ட பேசும்போது எந்த ரியாக்ஷனும் இல்லாம கம்முன்னா இருப்போம்? "ம்ம்ம்"ன்னோ இல்ல "சரி"-ன்னோ சொல்றதில்ல? அந்த மாதிரிதான். அட நிங்க பிஸின்னா கூட, "நான் இப்போ பிஸி"-ன்னாவது ஒரு ரிப்ளை பண்ணலாமில்ல? அதுக்கு மிஞ்சிப் போனா ஒரு பத்து வினாடி ஆகுமா? அதுக்கு கூடவா நமக்கு டைம் இல்ல?

அதே மாதிரி வர்ற எல்லா விதமான இமெயிலுக்கும் ரிப்ளை பண்ணிட்டு இருக்கக்குடாது. எதுக்கு/யாருக்கு ரிப்ளை பண்ணனும்/பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சிருக்கணும். சில பேர் அவங்க இமெயில் அக்கவுன்ட்ட பாக்குறதே இல்ல. இவங்க இதுக்கும் மேல. வீட்ட பூட்டிட்டு எங்கயோ போயிட்டா மாதிரி (இமெயில் அக்கவுண்ட்டே இல்லாதவங்கள உடுங்க). அவங்களை எல்லாம் என்ன பண்றது?

செலவில்லாம ஒரு விஷயத்த பகிர்ந்துக்க இமெயில் எவ்ளோ நல்ல விஷயம்? இண்டர்நெட்ல தேவை இல்லாம எவ்ளோ நேரம் செலவு பண்றோம்? நம்ம உறவுகள, அவங்க எண்ணங்கள பகிர்ந்துக்க இந்த இமெயில தினமும் ஒரு சில நிமிடங்கள் பயன்படுத்தினா என்ன?


அதே மாதிரி சிலர செல்போன்ல கால் பண்ணினா எடுக்க மாட்டாங்க. திருப்பி நமக்கு கால் பண்ணவும் மாட்டாங்க. (சில சமயம் எடுத்தாலும் "டேய் மச்சி, நான் இப்போ கொஞ்சம் பிசிடா... ஒன அவர்-ல நானே போன் பண்றேன்"-ன்னு சொல்லுவாங்க; ஒரு மணி நேரம் என்ன ஒரு நாளே வெயிட் பண்ணினாலும் நம்மள கால் பண்ண மாட்டாங்க). எதோ தெரியாத நம்பர்ல இருந்து வந்த கால்-னா கூட பரவாயில்ல. யார் பண்ணி இருக்காங்கன்னு தெரியும், "எதுக்கோ கால் பண்ணி இருக்கானே, நாம அட்டெண்ட் பண்ணலையே, கூப்பிட்டு என்னன்னு கேக்கலாம்"-ன்னு கொஞ்சம் கூட கவலைப்படுறது கிடையாது. திரும்பவும் நாமலே கால் பண்ணினாலும் திரும்பவும் பிஸி. அட கருமமே... இது எதோ ஒரு நாள்-(இல்ல எப்பவாவது)ன்னா பரவாயில்ல. எப்பவுமே இப்பிடித்தான்னா என்ன பண்றது?

நமக்கு தெரிந்தவர்களையும் நெருங்கினவர்களையும் விட்டு விலகி, அதுவும் அவங்களுக்கு ஒரு தேவைங்கற நேரத்துல அவங்களோட தொடர்பு எல்லைக்கு வெளில நின்னுகிட்டு என்ன பிஸியா இருந்து என்ன பிரயோசனம்? அப்பிடி சம்பாதிச்சுதான் என்ன புண்ணியம்?

............. யோசிக்கலாமே!!!

-சமுத்திரன்.

Sunday, July 25, 2010

சிங்கப்பூர் - என்ன கொடுமை சார் இது?

உணவு... உடை... உறைவிடம்...

இது மூணு்ல உறைவிடம் எவ்ளோ முக்கியம்னு சிங்கப்பூர் வந்த மொத ரெண்டே வாரத்துல தெரிஞ்சு போச்சு. சாப்பாடு & உடை பிரச்சினை இல்ல. தங்குறதுக்கு எடம் பாக்குறதுக்குள்ள மனசும் ஒடம்பும் பட்ட பாட்ட சொல்ல முடியாது - அப்பப்பா. வெளக்கமாவே சொல்றேன் - அதுக்குதான இந்த பதிவு.

சிங்கப்பூருக்கு நான் வந்தப்ப, எங்க கம்பெனில மொத 5 நாள் ஓட்டல்ல தங்குறதுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தாங்க (5 நாளுக்குள்ள ஒரு வீடு பாத்து போயிடுங்க, வீடு பாக்குறது இங்க ரொம்ப சுலுவம்ன்னுட்டானுங்க). யப்பா, இங்க வந்து பாத்தாத்தான் தெரியுது, வீடு பாக்குறது எவ்ளோ கஷ்டமான வேலைன்னு. வீடு எல்லாம் இருக்குது, ஆனா இவனுங்க சொல்ற ஒரு மாச வாடகைல ஒரு கிரவுண்ட் நெலமே நம்ம ஊர்ல வாங்கிடலாம். அட, எனக்கு குடுக்குற சம்பலத்துல பாதிய வாடகையா கேக்குறாங்கங்க. இப்பிடி வாடகை எல்லாம் தாறு மாறா ஏறினது எல்லாம் கடந்த 2 மாசத்துலதான்னு சொல்றானுங்க. என்ன கருமமோ. சரி விஷயத்துக்கு வருவோம்.

கம்பெனில குடுத்த 5 நாள் (ஒட்டல்ல தங்குறதுக்கு) முடிஞ்சு போச்சு, வீடும் கெடச்ச பாடில்ல. வீடு கெடைக்கிற வரைக்கும் யார்கூடவாவது தங்கிக்கலாம்னு பாத்தாலும் அதுக்கும் எங்கியும் வாய்ப்பு இல்ல. இங்க இருக்குற நண்பர்களும் எவ்ளவோ ட்ரை பண்ணி பாத்தாங்க - எதுவும் கெடைக்கல. எங்க கம்பெனில இதுக்கும் மேல என்னா ஆனாலும் ஓட்டல்ல தங்கறதுக்கு பணம் கெடயாதுன்னுட்டாங்க (நல்லா இருங்க, எனக்கும் காலம் வரும்டீ - revenge). இங்க இருக்குற ஓட்டல் வாடகைல, நாம  நம்ம கை காசு போட்டு ஒரு வாரம் கூட தங்க முடியாது.

என்னோட நல்ல நேரம்; நம் நண்பர் ஒருவர் இந்தியால இருந்து அவரோட கம்பெனில வேலை விஷயமா ஒரு வாரம் சிங்கப்பூர் வந்தார். அவரோட பெருந்தன்மையால, அவங்க கம்பெனி மூலமா அவருக்கு புக் பண்ணி இருந்த ஓட்டல்ல நானும் அந்த 1 வாரம் தங்கிக்கிட்டேன். அவர் கிளம்பற நாளும் வந்திடுச்சு. இன்னும் ஒரு எடமும் கெடைக்கல. வேற வழி இல்லாம, நண்பர் சுரேஷ், என்னை அவரோட ரூமுக்கு (எக்ஸ்ஷ்ட்ரா லக்கேஜா) கூட்டிட்டு போயிட்டார். அங்க ஒரு 2 நாள். அப்புறமா என் கூட வேலை செய்ற நண்பர் ரூமுல ஒரு வார அக்ரிமென்ட்ல தங்கினேன். அதுவும் முடியற நாள் வந்துடுச்சு. சிங்கப்பூர் மேல அடங்காத வெறுப்பு. வேலைய உட்டுட்டு திரும்பி ஊருக்கு போயிடலாமான்னு கூட யோசிச்சேன். prestige எடம் கொடுக்கல. ஒரு வழியா கல்லூரி நண்பர் சிவசங்கர் மூலமா அவரோட நண்பர் வீட்டுல ஒரு ரூம் கிடைச்சு, நான் வீடு பாக்குற வரைக்கும் தங்கியிருக்க அனுமதிச்சிருக்காங்க. இன்னிக்கு வரைக்கும் வீடு பாத்துகிட்டேதான் இருக்கேன், அமையல.

திரும்பி பாத்தா, மொத்தமா 3 வாரம்(தான்) ஓடி இருக்கு. ஆனா இந்த 3 வாரத்துல நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமில்ல. என்கிட்ட 2 பெரிய பெட்டி, 2 bag + 1 laptop இருக்குது. ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போறப்ப, அத்தன பெட்டியையும் தூக்கிட்டு போகனும். நண்பர்கள் அப்பப்ப உதவி பண்ணாங்க. இல்லைன்னா நான் என்ன பண்ணி இருப்பேன்னு தெரியல.

அடுத்த நாள் எங்க தங்குவேன்னு தெரியாது. அடுத்த நாளும் வந்திடும், எங்க போகப்போறோம்னு தெரியாது. ஏதாவது ஒரு ரூம் போலாம்னு பிளான் பண்ணவே முடியாது; அதா இதான்னு இழுத்துட்டே இருக்கும், ஏதாவது காரணத்தால கடைசி நாள் அந்த ரூமும் இல்லைன்னு ஆயிடும். ஒவ்வொரு நாளும் நரகம்தான் (அந்த வலி அனுபவிச்ச எனக்கு மட்டும்தாங்க தெரியும்). நான் அப்பப்ப பொலம்பினப்ப, நண்பர் சுரேஷ் எனக்கு குடுத்த தைரியம்தான் எப்படியோ சமாளிக்க வச்சுது. ஆனா தங்குறதுக்கு solid-ஆ ஒரு எடம் அமைஞ்ச உடனே மனசுக்குள்ள ஒரு திருப்தியும் நிம்மதியும் வந்துச்சு பாருங்க - ரூம் குடுத்த நண்பர் தெய்வமா தெரிஞ்சார், அவர் நல்லா இருக்கட்டும்.

இத்தன கஷ்டத்தையும் சமாளிச்சுட்டு நான் இங்க அப்பிடி என்னத்த கிழிக்கப் போறேன்னு உங்களுக்கு தோணும், எனக்கும் அதேதான் தோணுது. நண்பர்கள் எல்லாருமே, "வீடு கெடைக்கிற வரைக்கும்தான் இந்த பிரச்சினை, அதுக்கு அப்புறம் நல்லா இருக்கும்"-ங்குறாங்க, அதையும்தான் பாப்போம்.

-சமுத்ரன்

Sunday, July 18, 2010

மலேஷியா சுறுப்ப பயணம் - பகுதி 2

மொத நாள் கோலாலம்பூர சுத்தி பாத்துட்டு, அன்னிக்கு ராத்திரி பஸ்ல ஏறி 'லங்காவி' தீவுக்கு கெளம்பினோம். மனசுக்குள்ள ஒரு கேள்வி -> ஏறக்குறைய ரெண்டர நாள் அந்த தீவுல என்ன பண்ணப் போறோம்? அப்பிடியே பஸ்ல நல்லா தூங்கியாச்சு. அடுத்த நாள் காலங்கத்தால ஒரு கடலோரத்துல கொண்டு போயி வுட்டான். அங்கிருந்து கப்பல் (ferry) வழியா அந்த தீவுக்கு போனோம். 
கப்பல்ல போறது ரொம்ப புதுசா இருந்துச்சு. ஒரு தீவ முன்ன-பின்ன பாத்தது வேற இல்லியா, அதனால அத பாக்க ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. ferryல போவும்போது மதேஷும் சுந்தரும் அவங்கவங்க மிஸ்ஸஸ்ஸோட கடலை போட ஆரம்பிச்சிட்டாங்க (எனக்கு கொஞ்சம் நஞ்சம் இல்லைங்க, நெறையவே பொறாமைங்க). தூங்கிப் பார்த்தேன்! தூக்கம் வரல (எப்பிடி வரும்?), கேமராவ தூக்கிட்டு புறப்பட்டுட்டேன். கொஞ்ச நேரம் பாத்தேன், அவங்க கடலைய நிறுத்தின பாடில்ல (நமக்குதான் யாரும் உருப்பட்டா புடிக்காதே). கிட்ட போயி, "வெளில வந்து பாருங்க, பாக்குறதுக்கு சூப்பரா இருக்கு"-ன்னேன். உடனே கடலைய உட்டுட்டு அவங்களும் ஆளுக்கு ஒரு கேமராவ கைல எடுத்துகிட்டாங்க (முத்து... எப்பிடிடா? என்னமோ போடா).

லோக்கல் டூர்-னாலே பலவிதமான angle-ல படம் (படுத்தி) எடுப்போம், இங்க வந்து சும்மாவா இருப்போம்?. background-ல கடல்... ஆளாளுக்கு போஸ் குடுக்க ஆரம்பிச்சோம். கூட வந்தவனெல்லாம் ஒரு மாதிரியா எங்கள பாக்கற வரைக்கும் பலவிதமான போஸ்ல போட்டோ எடுத்தோம். ("கொஞ்சம் சிரிங்க", "இன்னும் கொஞ்சம் கிட்ட வாங்க", "பின்னாடி glar அடிக்குதுங்க, இந்த பக்கம் தள்ளி வாங்க"-ன்னு ஒண்ணுமே இல்லாததுக்கு வழக்கம்போல கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ?!). இதுல வேற, நான் ஒருத்தன்கிட்ட என் கேமராவ குடுத்து 'என்னை ஒரு போட்டோ எடு'-ன்னு கேட்டேன், (வேற வழி இல்லாம) அவனும் எடுத்தான்.

ஒரு மணி நேரத்துல தீவுக்கு போயாச்சு (மணி காலைல 8). 'லங்காவி' தீவோட மொத்த சுற்றளவு சுமார் 60 கி.மீ. இருக்கும்னு சொன்னாங்க. வாடகைக்கு ஒரு காரை எடுத்துட்டு (அதுக்கே 2 மணி நேரம் ஆயிடுச்சு)  நாங்க புக் பண்ணி இருந்த ஓட்டலுக்கு போனோம். குளிச்சு, லஞ்ச் முடிச்சுட்டு கெளம்பி நேரா Cable Car-க்கு கெளம்பினோம். போற வழி என்னமா இருக்குது... அந்த தீவு முழுக்க அப்பிடித்தான். சும்மா பச்ச பசேல்னு பாக்குறதுக்கே கண்ணுக்கு இதமா இருந்துச்சு. மனசுக்கும் சாந்தமா அவ்ளோ அமைதியா இருந்துது. அந்த ஊரு மக்களும் ரொம்ப வெகுளியா இருக்காங்க. அருமையான இடம்ங்க.

சரி, Cable கார்க்கு வருவோம். Cable கார்ல நம்மள ஏத்திக்கிட்டு கீழ இருந்து ஒரு பக்கா ஒயரமான மலைக்கு இழுத்துட்டு போறாங்க பாருங்க... பட்டாசு போங்க. செம த்ரில். அத பத்தி சொன்னா புரியாதுங்க, அனுபவிச்சு பாக்கனும். அதுல போவும்போது தலை, கை, கால் எல்லாம் ஒரு மாதிரி 'கிர்ர்ர்ர்'-ன்னு ஆவுது (தண்ணி போட்டா இப்பிடித்தான் இருக்குமோ?), காது அடைக்குது, நெஞ்சுல ஏதோ பண்ணுது - ஆனாலும் அது நல்லாத்தான் இருக்குது.

சுந்தர் என்னை மாதிரியே பயம் இல்லாத மாதிரி முகத்த வச்சுகிட்டு வந்தார். ஆனா மாதேஷ் முகத்துல நல்ல பயம், இதையே சாக்கா வச்சு அவரோட மிஸ்ஸஸ்ஸ அப்பப்போ அணைச்சுகிட்டார் (இதுக்காகவே அவர் பயந்தா மாதிரி நடிச்சாரோ?). ஆனாலும் அவர் பயந்து நடுங்குரத பாக்கவே ஜாலியா இருந்துச்சு. என் நேரம்!!! என்னோட மிஸ்ஸஸ்ஸ கூட்டிட்டு போக முடியாம போச்சு. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... சரி, அத உடுங்க ம்ம்ம், அவனவன் கவலை அவனவனுக்கு பெருசு.

கம்பி ஏதாவது அறுந்து, கார் அவ்ளோ ஆழத்துல கீழ விழுந்தா நாங்கெல்லாம் என்ன ஆஆஆஆ....ஆவோம்னு (?!) ஒருத்தர் மாத்தி ஒருத்தர் (ரொம்பவே நெகட்டிவா) பேசிகிட்டே போனோம், அது ஜாலியாவும்(?!) இருந்துச்சு. என் பக்கத்துல உக்காந்திருந்த சுந்தர் 'உம்'-ன்னே வந்தார். ஏன்னா, அவரோட மிஸ்ஸஸ் அவர் பக்கத்துல உக்காந்தா கார் பாலன்ஸ் இருக்காதுன்னு பிரிச்சு எதுத்தாப்ல இருந்த சீட்ல உக்கார வச்சுட்டோம் (ஹல்லோ, இதுல எந்த பிளானும் இல்லைங்க). இருந்தாலும் அவர், அவரோட மிஸ்ஸஸ் பயப்படுறத பாத்து உள்ளுக்குள்ள சந்தோஷப்பட்டா மாதிரி தெரிஞ்சுது, ஆனா வெளில காட்டிக்கல (பத்த வைக்க பாக்குறியே, பரட்ட). அப்பிடியே ஒரு கால் மணி நேரம், ஒரு மலை மேல போயி எறக்கிவுடுறாங்க (அப்பாடா-ன்னு இருந்துச்சு).

அவ்ளோ ஒயரத்துல இருந்து எங்க பாத்தாலும் அடர்ந்த காடுகள் + மலைகள் + கடல் + கடல் நடுவுல மலை மலையா தீவுகள். என்னமா இருக்குது போங்க. அங்க இருந்து திரும்பவும் Cable கார்ல ஏறி அதுக்கும் அந்தப்பக்கம் இருக்குற இன்னொரு மலை மேல கொண்டு போயி விட்டாங்க. அட.... நம்ம அஜித்தோட பில்லா படத்துல வர்ற arrow bridge அங்கதாங்க இருக்குது... அதுவும் ரெண்டு பெரிய மலைங்களுக்கு நடுவதான் இருக்குது. அந்த பாலத்துல நடக்கும்போது பாலம் லேசா ஆடுது, அதனால மொதல்ல நடக்குறதுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு, அப்புறமா பழகிடுச்சு. பாலத்துல ஒரு ரவுண்டு போனது நல்ல அனுபவம்.

கடைசியா, Cable கார்லயே ரொம்ப பாதுகாப்பா திரும்ப கீழ கூட்டிட்டு வந்து விட்டுடுறாங்க. மொத்தமா இதுக்கு கட்டணம் 25 மலேஷியா ரிங்கிட்தான் (இந்திய மதிப்புல சுமாரா 350 ரூபாய்). அனுபவிக்கிறதுக்கு என்னமா செஞ்சு வச்சிருக்கானுங்க, நம்ம ஊர்ல இப்பிடி எல்லாம் என்னைக்குதான் வர்றதோ?

அப்புறமா ஒரு கடற்கரைக்கு போனோம். அங்க கொஞ்ச நேரம் அப்பிடியே எதுவும் பேசாம உக்காந்திருந்தோம். சில கொழந்தங்க அந்த கடற்கரை மணல்ல வெளையாடுறத பாத்துட்டு இருந்தேன். என்னடா கொஞ்ச நேரமா சத்தத்தையே காணோம்னு திரும்பிப் பாத்தா, மதேஷும் சுந்தரும் ஆளுக்கொரு பக்கம் அவங்கவங்க மிஸ்ஸஸ்ஸோட "கண்ணும் கண்ணும் நோக்கியா"-ன்னு ரொமான்ஸ்ல எறங்கிட்டாங்க. கூப்பிட்டு பாத்தேன், அதுக்கு மாதேஷ், "முத்து, பீச்ச சுத்தி பாக்கனும்னு சொன்னீங்கள்ல, போயிட்டு வாங்க"-னாரு. "நான் எப்பங்க அப்பிடி சொன்னேன்???". பதில் இல்ல. சரி, டூர் வந்துட்டு இதெல்லாம் சகஜம்னு மனச தேத்திக்கலாம்னு பாத்தா, நம்ம பொலப்புதான் இவிங்கள பாத்து பொறாமைப்படுறதுலையே போயிரும்போல இருக்கே. நீங்களே கொஞ்சம் என் நெலமைய யோசிச்சு பாருங்க. இதுக்குதான், சௌந்தர் / சீனி / கோபால் -ன்னு யாரையாவது கூட வாங்கடான்னு கூப்பிட்டேன். எல்லாருமே கடைசில கால வாரிட்டாங்க. அப்பறம் வேற என்ன பண்றது? அவரு சொன்னா மாதிரியே நான் 'பீச்'-அ ஒரு ரவுண்டு வந்தேன். அவங்களாவே ஒரு வழியா எந்திருச்சு வந்தவுடனே (எவ்......ளோ நேரம்?) 'டின்னர்'க்கு கெளம்பிட்டோம்.

ஆனா, அன்னிக்கு மத்தியானம் உலகத்துக்கே தெரிஞ்ச முக்கியமான ஒரு விஷயம் எங்களுக்கு மட்டும் அது வரைக்கும் தெரியவே தெரியாது. அன்னிக்கு மதியம் 3 மணிக்கு மலேஷியா முழுக்க சுனாமி எச்சரிக்கை விட்டிருக்காங்க, அப்புறமா வாபஸ் வாங்கிட்டாங்களாம். விஷயம் தெரிஞ்சதும் 'பக்'-ன்னு ஆயிடுச்சு.

அடுத்த நாள் காலைல 'Island Hopping'-க்கு கெளம்பினோம். ஒரு சின்ன மோட்டார் படகுல (பத்து பேர் உக்காந்து போறா மாதிரி இருக்குது) அந்த தீவ சுத்தி கூட்டிட்டு போனாங்க. அன்னிக்கு சரியான மழை. ரொம்ப நேரமா மழை பின்னி எடுக்குது. இப்போதைக்கு நிக்கிறா மாதிரியும் தெரியல. நாங்களும் 'என்னடா இது'-ன்னு பொலம்பிகிட்டே படகுல ஏறினோம். 

கடல்ல பயங்கர அலை. எதையும் கண்டுக்காம படகோட்டி வேகமா படக ஓட்றான். சொல்லனுமா? படகு அப்பிடியே air-ல பறந்து உழுவுது, அப்புறம் அடுத்தடுத்த அலைமேல ஏறி திரும்ப ஒரு ஆட்டு ஆட்டி உழுவுது. கேப்பே இல்லாம ஆட்டுன ஆட்டுல, உசுர கைல புடிச்சுட்டு, பயங்கரமா கத்த ஆரம்பிச்சிட்டோம். ஆனா அந்த படகோட்டி, எதையும் கண்டுக்கல. 'எப்பிடியும் இன்னிக்கு ஆப்புதாண்டி'-ன்னு தோனுச்சு. இப்போ நெனச்சா கூட பயங்கரமா இருக்குது. ஆனா கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அலை எதுவும் இல்லை, அங்க அமைதியா படகு போச்சு. அப்பிடியே கொண்டு போயி ஒரு கரைல எறக்கி விட்டான்.

அந்த சின்ன கடற்கரைல, மணல் வெள்ளையா இருக்குதுங்க, கடற்கரை ரொம்ப அழகா இருந்துச்சு. அங்க மக்கள் யாருமே இல்லை. ஆனா நாங்க போனதுக்கப்புறம் சிலர் வந்தாங்க. எல்லாருமே எங்கள மாதிரி சுற்றுலா வந்தவங்கதான்.

எங்க பாத்தாலும் மலை தீவுங்கதான் (ஒவ்வொரு மலையும் ஒரு தீவு). அந்த கடல் + வெள்ளை மணல் + கடற்கரை + மழை + மலை (தீவு) + மலை மேல இருந்த மேகங்கள் எல்லாமா சேந்து பாக்குறதுக்கு சும்மா சொர்க்கம் மாதிரி இருந்துச்சு. செம்ம குஷியாயிட்டோம். மழைக்கு நாங்க போட்டிருந்த முக்காட்டை எல்லாம் எடுத்து தூர போட்டுட்டு, free-யா மழைல நனைஞ்சுகிட்டு கடல்ல குதிச்சுட்டோம். மனசு கொழந்தையா மாறிடுச்சு (அடடா இதையெல்லாம் ஆராயக்கூடாது... அப்பிடியே ஒரு flow-ல சொல்லிட்டேன்). நீச்சல், குதிக்கிறது, ஓடுறது-ன்னு நல்லா ஆட்டம் போட்டோம்.

நேரம் போகப் போக அந்த இடம் இன்னும் அழகா தெரிஞ்சுது. அந்த எடத்த விட்டு வர்றதுக்கு எங்களுக்கு மனசே இல்லங்க. 1 மணி நேரம் கழிச்சு திரும்ப எங்கள படகு மூலமா  fresh water lake-ன்னு ஒரு எடத்துல கொண்டு போயி விட்டான். அந்த ஏரி மலைகளுக்கு நடுவுல இருக்குதுங்க. நாலு பக்கமும், மலை அந்த மலைகளுக்கு வெளிய கடல், உள்ள இந்த ஏரி. இந்த ஏரியோட தனித்துவம் என்னான்னா, நாலு பக்கமும் கடல் இருந்தாலும், இந்த ஏரி தண்ணி உப்பு கரிக்காது. இந்த ஏரில பெடல் போட், நீச்சல் எல்லாமே போலாம், ரொம்ப பாதுகாப்பாவும் இருந்துச்சு. இந்த ஏரில இருக்குற ஒரு மலை பாக்குறதுக்கு கர்பினிப்பெண் படுத்திருக்குறா மாதிரி இருக்குது (கீழ படத்த பாருங்க).

மறுபடியும் அப்பிடியே படகுல சுத்தி காட்டிட்டு, திருப்பி கொண்டு வந்து விட்டுட்டாங்க. அது வரைக்கும் மழை பெஞ்சுட்.........டே இருந்துச்சு.

மீதி நேரத்துல ரெண்டு கடற்கரை, ஒரு கோயில்னு ஒரு ரவுண்டு வந்துட்டு அடுத்த நாள் அங்கயிருந்து மனசே இல்லாம பினாங்கு தீவுக்கு மாதேஷ் குடும்பமும் நானும் புறப்பட்டோம் (சுந்தர் குடும்பம் அப்படியே சிங்கப்பூருக்கு விமானம் ஏறிட்டாங்க).2 நாள் போனதே தெரியலங்க.

லங்காவி தீவு பற்றிய சில பல குறிப்புகள்:
1. எந்த பக்கம் போனாலும் அழகுதான். கடற்கரை, பசுமை, அமைதி, சுத்தம், சுகாதாரம் இப்பிடி அடுக்கிகிட்டே போகலாம். எங்களுக்கு அங்க இருந்து கெளம்ப மனசே இல்லைங்கறதுதான் உண்மை.
2. அந்த தீவுக்கு வந்தவுடனே, ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கிட்டு நாமலே ஓட்டிக்கிட்டு தீவுக்குள்ள போறதுதான் நல்லது. இந்திய டிரைவிங் லைசன்ஸ் வச்சிருந்தாலே போதும், காரை வாடகைக்கு எடுக்க முடியும். டிரைவிங் ரூல்ஸ்ம் இந்தியா மாதிரிதான் (ஆனா போலிஸ் அப்பிடி இல்லிங்க, ஜாக்கிரதை). கார் இருந்தா அங்க நாம நெனச்ச நேரத்துக்கு நெனச்ச எடத்துக்கு கார எடுத்துகிட்டு போயிட்டே இருக்கலாம். செலவும் கம்மி. டேக்ஸி எல்லாம் ரொம்ப காஸ்ட்லி. காரை ஒரு புரோக்கர்கிட்ட பேரம் பேசித்தான் வாடகைக்கு எடுக்ககனும், அதுக்குன்னே அங்க நெறைய பேர் இருக்காங்க. ரெண்டு பேர் மட்டுமே போனா, பைக் கூட வாடகைக்கு எடுத்துக்கலாம். அது இன்னும் செலவு கம்மி. நாங்க, 5 பேர் போறா மாதிரி ஒரு காரை (sentra) ஒரு நாளைக்கு 130 மலேஷியா ரிங்கிட்டுக்கு வாடகைக்கு எடுத்தோம்.

3. நெறைய தமிழ் மக்கள் இருக்குறாங்க. சில பேர் ஓட்டல்லயும் சில பேர் சிறு தொழில் செஞ்சுகிட்டும் வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்குறாங்க.
4. இங்கயும் விவசாயம் இருக்கு, பூர்வீக மக்கள் நெறையவே இருக்காங்க. அவங்களெல்லாம் ரொம்ப வெகுளியா இருக்குறாங்க.
5. மலேசியாவுக்கும் 'லங்காவி' தீவுக்கும் எந்த விதமான ரோடு பாதையும் இல்ல. எது/யார் வந்தாலும் போனாலும் விமானம் மூலமாகவோ, இல்ல கப்பல் மூலமாகவோதான் வரணும் போகணும்.
6. இந்த தீவுக்கு தினமும் நெறைய சுற்றுலா பயணிகள் வர்றாங்க. அதுவும் ஜோடியாதான் வர்றாங்க (அதனால அவங்க எப்பவும் ரொமான்ஸ் மூடுலதான் இருக்குறாணுங்க). நம்மள பொறுத்த வரைக்கும், தனியா போனாலும் சரி இல்ல ஜோடியா போனாலும் சரி, ஒரு 2-3 நண்பர்கள் / உறவினர்கள் குடும்பம் சேந்து gang-ஆ போனா நல்லா enjoy பண்ணலாம்.
7. ஜாலியா வெளையாடுறதுக்குன்னு நெறைய games / options இருக்கு. ஆனாலும் எதுவுமே செய்யாம சும்மா ஒரு கடற்கரையில அப்பிடியே உக்காந்து இருக்குறதுகூட இங்க இனிமையா இருக்கும்ங்க.
8. லங்க்காவி தீவுன்னாலே கழுகுதான் ரொம்ப பேமஸ். அந்த மலை தீவுகள்ல நெறைய கழுகுகள் இருக்குன்னு நினைக்கிறேன். அதோட நினைவா அங்க பிரம்மாண்டமான கழுகு சிலை ஒன்னு வச்சிருக்காங்க. அந்த சிலையோட வடிவமும் அத வச்சிருக்குற இடமும் அட்டகாசமா இருக்குதுங்க.

பினாங்கு தீவு மற்றும் புத்ரஜெயா நகரம் பற்றி அடுத்த பகுதியில்...

-சமுத்திரன்

Saturday, July 3, 2010

மலேஷியா - சுற்றுலா கட்டுரை 1

இந்த சுற்றுலாவிற்கு நானும் எனது நண்பர்களும் தயாரானதே ஒரு பெரிய கதை. அதை விடுத்து, மலேஷியா சுற்றுலாவின் சாராம்சத்தை சொல்கிறேன்.

திருச்சிலருந்து விமானம் வழியா கோலா லம்பூர் வந்தப்ப, காலைல மணி 1. ஊரே ஒளி வெள்ளத்துல மெதந்துச்சு. சாலைல பூரா வரிசையா வெளக்கு. மின் தடையே இந்த ஊர்ல (ஏன் நாட்டுலயே) இல்லயாம்பா. வந்த மொத நாளே வாயை பொளந்துட்டு காருல ஏறி ஊருக்குள்ள வந்தோம் (வழக்கம்போல விமான நிலையத்த, ஊர உட்டு ரொம்ப தூரம் தள்ளி வச்சிருக்காங்க).

அடுத்த நாள் காலங்கத்தால 5.30 மணிக்கே எழுப்பி, ரெட்டை கட்டிடத்த (petronas towers) பாக்க டிக்கெட் வாங்கனும்னு என்னையும் சுந்தரையும் அனுப்பி வச்சுட்டாங்க. சுமாரா ஒரு 7 மணிக்கு அங்க போனா, அங்க ஒரு 200 பேர் ஏற்கனவே வந்து வரிசைல நின்னுட்டிருந்தான். நாங்களும் போயி தூங்கிட்டே நின்னுட்டிருந்தோம். 9 மணிக்கு வந்து டிக்கெட் குடுக்க ஆரம்பிச்சான். அட....... காசு எதுவும் இல்லப்பா... சும்மாவே டிக்கெட் தரான். நமக்கு தோதான நேரத்த சொன்னா, ஒரு ஆளுக்கு 5 டிக்கெட் வரைக்கும் தரான். ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுந்தான் மேல ஏறி பாக்க அனுமதி, அதனாலதான் அப்பிடி கூட்டம்னு புரிஞ்சுது. வாங்கிட்டு வந்தா, அவ்ளோ நேரம் நின்னதால கால் பயங்கர வலி + பசி. சரவண பவன் பக்கத்துலயே இருந்துச்சு, சாப்பிட்டுட்டு எல்லாருமா மதியானம் திரும்ப அங்க போனோம்.
அம்மா..டி!!! காலைல தூக்கம் + பசில சரியா பாக்கல, அந்த கட்டிடங்கள் ரண்டும் என்னா ஒயரம்?! ரண்டுக்கும் நடுவுல அடுத்தடுத்ததா 2 மாடிகளுக்கு இணைப்பு பாளம் வேற. பாக்குறதுக்கே அவ்ளோ அழகு. அந்த கட்டிடத்துல மொத்தமா 84 மாடியாம். டிக்கெட் எடுத்திருந்தா அந்த இணைப்பு தளம் வரைக்கும் (34வது மாடின்னு நினைக்கிறேன்) கூட்டிட்டு போயி காட்டுறான். இடையில அந்த கோபுரம் பத்தியும், பெட்ரொனஸ் (petronas) கம்பெனி பத்தியும் வீடியோல சொல்றான் (அடடா, விளம்பரம் ஆச்சுல்ல). மேல ஏறி பாத்தா, அந்த ஊரே பூறா அவ்ளோ அழகா தெரியுது. எங்க கேமராவுக்கு அங்கதான் மலேஷியாவுல மொத வேல குடுத்தோம். எந்த கட்டிடத்த பாத்தாலும் சாதரணமாவே 50-60 மாடிதான். 10-15 மாடி கட்டிடத்த குடிசை-ன்னு சொல்றங்களோ என்னமோ...




அடுத்தது நாங்க போனது முருகன் கோயில்.
கேள்விப்பட்ட மாதிரியே ரொம்ப ஒயரமான முருகன் சிலை. ஆனா, அந்த சிலைக்கு யாரும் பூஜை செய்றதில்ல. அந்த சிலைக்கு பின்னாடி இருக்குற குகைல இருக்குற சாமிகளையும், சிலைக்கு பக்கத்துல இருக்குற மண்டபத்துல இருக்குற சாமி சிலைக்குந்தான் பூஜை பன்றாங்க.
அவ்ளோ பெரிய முருகன் சிலைக்கு அந்த முகந்தான் கொள்ளை அழகு. ரசிச்சு முகத்த செதுக்கி இருக்காங்க. பின்னாடி இருக்குற குகை அவ்ளோ பெரிசு போங்க. நாங்க எதிர்பார்க்கவே இல்ல. சின்ன ஓட்டைங்க வழியா உள்ள விழற சூரிய ஒளி ரொம்பவே அருமை. குகையோட செவுரெல்லாம் (அட, சுவர்-ங்க) இயற்கையா அழகா இருக்கு. கண்டிப்பா நம்ம குடும்பம், நண்பர்ங்க எல்லாம் இங்க வந்து பாக்கனுங்க.

அந்த ஊர்ல இருக்குறவங்கள்ள 50%க்கும் மேல ரொம்ப நல்லா தமிழ் (தஞ்சாவூர், புதுக்கோட்டை வழக்கு தமிழ்) பேசுராங்கப்பா. கோயிலுக்கு பக்கத்துல இருக்குற அத்தன ஓட்டலும் தமிழ் ஓட்டல்தான். அங்கதான் நாங்க மத்தியானம் சாப்பாடு சாப்பிட்டோம், ருசி சொல்லிகிறா மாதிரி இல்லைன்னாலும், வயித்துக்கு மோசமில்லை (தமிழ்-லாம் நல்லா பேசறீங்க, சாப்பாட்டு ருசிய கொஞ்சம் நமக்கேத்தா மாதிரி பண்ணுங்களேம்பா).

அடுத்ததா நாங்க அன்னைக்கு ராத்திரி கெளம்புனது 'லங்காவி' (Langkawi)-ங்குற தீவுக்கு. அத பத்தி அடுத்த பகுதில பாப்போம்.

-சமுத்ரன்

சிங்கப்பூர் விஜயம்

இனி நமது தளம் கலகல-தான்!!!