Saturday, September 26, 2009

நெனச்சேன் நான் அப்போவே நெனச்சேன்...

"ஏன் இவ்ளோ லேட்?"

"அதான் போகும்போதே சொன்னேன் இல்ல?"

"..."

"ஏற்கனவே சாப்பிட்டிருப்பீங்களே?"

"எப்பிடி கரெக்டா சொல்ற‌?"

"இத கூட புரிஞ்சுக்கலைன்னா அப்புறம் நான் என்ன பொண்டாட்டி?"

"ம்..."

"வந்தவுடனே சொல்றேன்னு சொன்னீங்களே. சொல்லுங்க‌."

"..............."

"என்ன ஆச்சு? இன்னிக்கும் ஆபிஸ்ல வேலைன்னு சொன்னது பொய்தானே?"

"அதான பாத்தேன், கண்டுபிடிச்சிட்டியா?"

"பொண்டாட்டிகிட்ட பொய் சொல்ற அளவுக்கு அப்பிடி என்ன காரணம்ன்னு கேக்குறேன்"

"இவ்ளோ சொல்றியே, இதையும் நீயே சொல்லேன்"

"பிரண்ட்ஸ் கூட, குடி கும்மாளமா..?"

"பாதிதான் கரக்ட்"

"அப்பிடின்னா, ஏதாவது பொன்னு கின்னு?"

"வீட்டுக்கு வந்த உடனே பேசறதுக்கு வேற விஷயமே இல்லியா உனக்கு? எல்லாம் நாளைக்கு பாத்துக்களாம்..."

"இப்போ சொல்ல போறீங்களா இல்லியா?"

"ம்..... உனக்கு இப்போ என்ன தெரியனும்?"

"யாரவ‌?"

"கூட வேலை செய்றவ, அப்பா‍ அம்மா சொந்தம் பந்தம் இல்லாத ஒரு அனாதை பொண்ணு"

"அதனால‌? கல்யாணமாயி பொண்டாட்டி புள்ளன்னு எதுக்கு அப்புறம்? நெனச்சேன், அடிக்கடி ஆபிஸ்ல வேலை வேலைன்னு டெய்லி லேட்டா வர்றது... புள்ளைங்ககிட்ட கூட சரியா முகம் குடுத்து பேசாதப்போவே நெனச்சேன்"

"இப்போ எதுக்கு இப்பிடி பொலம்பிட்டு இருக்க?"

"'சாரோட வீட்டப் பாக்கலாம்னு வந்தேன்'-னு சொல்லி அன்னிக்கு மினுக்கிகிட்டு வீட்டுக்கே வந்ததுமில்லாம பொண்டாட்டி பக்கத்துல இருக்குறதுகூட கண்டுக்காம‌ உரசிகிட்டே நின்னாளே, அவதானே? நெனச்சேன்... நான் அன்னிக்கே நெனசேன்... வெட்கங்கெட்டவ‌."

"இப்போ எதுக்கு தேவை இல்லாம அர்ச்சனை பண்ற?"

"இல்லங்க, உங்களுக்கு தெரியாது ஒரு பொண்டாட்டியோட‌ மனசு என்ன பாடு படும்னு."

"ம்? அப்டியா? அது ஒரு சீரியல்தான? அந்த கதைல என்ன நடந்தா என்ன? ரெஸ்ட் எடுக்கலாம்னு ஆபிஸ்க்கு லீவு போட்டா, என்ன சீரியல் பாக்க வச்சுட்ட‌... எனக்கு தலையும் புரியல காலும் புரியல. ஏதோ நீ சொன்னேன்னு இன்னிக்கு இந்த சீரியல்ல நடந்தத சொல்லிட்டேன், நாளைக்கு மீதிய நீயே பாத்துக்கோ..." - தன் மனைவியை மெல்ல அணைத்தான்.

"அய்யோ விடுங்க... மத்தியானத்துல போயி... நேரம் காலமே தெரியாது உங்களுக்கு. இதுக்குதான் ஆபிஸுக்கு லீவு போட்டீங்களா?" என்றவளிடம் "இதுக்கெல்லம் எதுக்கு நேரம் காலம்?" என்றான். செல்லமாக முறைத்துக்கொண்டு அவனிடமிருந்து விடுபட்டு "என்ன வெயிலு... எவ்ளோ கூட்டங்க இந்த காய்கறி வாங்கறதுக்குள்ள, அப்பப்பா?" - வாங்கி வந்த காய் கறிகளை உள்ளே எடுத்து சென்றாள்.

No comments:

Post a Comment